
Ayyanar Viswanath
Location: Dubai
His ProfilesRankThis is the rank of 'Ayyanar Viswanath' out of all Google+ Profiles.: 46,726 (GenderRankFor the gender 'Men'.: 29,600)
His ProfilesRankThis is the rank of 'Ayyanar Viswanath' out of all Google+ Profiles. in United Arab Emirates: 77 (GenderRankFor the gender 'Men'.: 54)
His CircleRankThis is the rank of 'Ayyanar Viswanath' out of all indexed profiles and pages at CircleCount.com.: 55,351
Followers: 1,959
Following: 242
Added to CircleCount.com: 07/13/2011That's the date, where Ayyanar Viswanath has been indexed by CircleCount.com.
This hasn't to be the date where the daily check has been started. (Update nowYou can update your stats by clicking on this link!
This can take a few seconds.)
Activity
Average numbers for the latest postings:
6 comments per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of how many comments someone has received recently.
0 reshares per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of .how often someone's posts have been reshared lately.
8 +1's per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of how many +1's someone has received on his or her posts recently.
1,661 characters per posting'Current posts' means the last 50 posts that are at the most 4 weeks old. So this metric gives a picture of how many characters someone has used per post recently.
Latest postings
2013-05-16 17:19:26 (33 comments, 0 reshares, 13 +1s)
பஷீர், கே.ஜி.ஜார்ஜ், பரதன், ஓ.வி இன்னும் யார்?... இன்னும் யார் ??...ஓகே நிறைய பேர்.... ஐ லவ் கேரளா மேன்.... சீரியஸ்லி. என்னா! ஸ்டேட். என்னா! மக்கள். நான் நேர்லயே போய் பாத்திருக்கேன். ஒரு சினிமா ஆளுமை ஆளரவமற்ற ஒரு வீட்டில நியூஸ் பேப்பர் வாசிச்சிட்டிருக்க சித்திரத்த நான் எழுதினேனே. மை காட். யூ ஆர் ஆல் டமில் ரீடர்ஸ். கொஞ்சம் ஆழமான விஷயங்கள நீங்க எலிமையா தாண்டி போய்டுவீங்கதானே , i believe u never read those . forget ab't this. என்னை அய்யனாரை படிக்கிறதா ஒரு விஷயம்!? நான் சொல்ல வந்ததது வேற.. என்னோட கோபம் எரிச்சல் fuck forget abt this... இத மனசுல வச்சுக்காதீங்க நான் சொல்ல வந்தது கேரளம் பத்தி. தே ஆர் த பெஸ்ட். ஐ ஷ்யூர். டேம்ன் ஷ்யூர் அபவுட் திஸ். ராசு அண்ணன் நாடோடி தடங்களில கேரளத்தையும் பார்ப்பனியர்களையும் ஒரே கோட்ல வச்சிருப்பார். அதுவும் ஒரு பார்வை. ஆனா அப்படி கிடையாதுங்கிறதும் வேற. ஆனா யூ நோ கைஸ். ராசு அண்ணன் க்ரேட். பெரிய விஷயத்த அசால்டா பண்ணியிருக்கார். ஆக்சுவலி இன்னிக்கு அவரோட புக்க பத்தி பேசனும்னுதான... more »

2013-05-16 16:17:33 (0 comments, 0 reshares, 2 +1s)
தேவதாரு பூத்து என் மனசின் தாழ் வரையில்
Devatharu Poothu...singers - P.Susheela & Shyam... Music - SHYAM

2013-05-16 05:52:45 (14 comments, 0 reshares, 7 +1s)
மரியான் இசை கேட்டேன். பாடல்கள் மொத்தமும் எழுதியது குட்டி ரேவதி யா? வழக்கமான வரிகளாகத்தான் தோன்றியது. இசையும் பெரிதாய் ஈர்க்கவில்லை. திரும்பத் திரும்பக் கேட்கையில் நெஞ்சே எழுவையும், எங்க போன ராசா வையும் பிடித்துப் போகலாம். கடல், நீர்ப்பறவை இதற்கு முன் வந்த கடலோர சினிமாக்கள் தந்த அயற்சியோ என்னவோ மரியான் மீது அவநம்பிக்கையே அதிகம் இருக்கிறது. ஜோடி. குருஸ், தனுஷ் என நம்பிக்கையூட்டும் ஆட்கள் இருந்தாலுமே கூட தமிழில் மீனவர்கள் வாழ்கைச் சித்திரம் சரியாகப் பதியப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை. பரதனின் அமரம் என்கிற காவியத்தை மீறி இந்தக் களத்தில் புதிதாய் ஏதாவது செய்துவிட முடியுமா என்ன? மம்மூட்டி - யின் ஆகச் சிறந்த நடிப்பு, முரளிக்கும் மம்மூட்டிக்குமிடையே பின்னப்பட்ட நட்பு. பரதனுக்கே உரிய தனித்தன்மைகளுடன் செதுக்கப்பட்ட நாயகியான மது. அவளின் பாவாடை சட்டை. ஹப்பா! மரியான் முழுவதுமாய் அல்ல அமரத்தின் கிட்டே நெருங்கி வந்தால் கூட போதும். தமிழ் சினிமாவில் கடல்கள் உருவாக்கிய கறைய கழுவி வி... more »

2013-05-16 04:02:31 (3 comments, 0 reshares, 8 +1s)
கூகுள் ப்ளஸ் ஆயாவிற்கு ஜீன்ஸ் மாட்டி விட்டது யார் யா?

2013-05-15 08:09:24 (6 comments, 0 reshares, 4 +1s)
இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம் : நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை முன் வைத்து

2013-05-14 06:53:16 (6 comments, 0 reshares, 8 +1s)
நூறு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்திருக்கிறது. இந்த மட்டில் உங்களுக்கு என் நன்றி தேவதேவன் :) நீர்ச் சுனை
பாறை ஒன்றின்
கானகத்
தனிமை மீதமர்ந்து
சுருண்டு
தன்னை
தன் நாவாலே நக்கித்
தூய்மை செய்துகொண்டிருந்த
ஒரு நாய்க்குட்டி என
குபுகுபு வென
ஒரு சின்னஞ் சிறிய
நீர்ச் சுனை.... more »

2013-05-13 10:12:29 (0 comments, 0 reshares, 11 +1s)
Kai po che பழைய கிரிக்கெட் நினைவுகளைத் தூர் வாரி விட்டது. சிறு நகரப் பதின்மர்களிடையே நிலவும் நட்பு கொஞ்சம் விசேஷமானது. ஆழமானது. பெருநகர/கிராமப்புற நட்பைக் காட்டிலும் கூடுதலான உணர்வுப்பூர்வத்தைக் கொண்டிருக்குமென்றே நம்புகிறேன். அல்லது எனக்கு அப்படி நேர்ந்தது. இஷான் போலவே எனக்கொரு நண்பன் இருக்கிறான். அவனுக்கு கிரிக்கெட்டைத் தவிர எதுவுமே தெரியாது. எப்படி பால் போட்டாலும் அடிப்பான். நல்ல பெளலர். பிரமாதமான ஃபீல்டர். திருவண்ணாமலையில் இவனைத் தெரியாத கிரிக்கெட் டீமே கிடையாது. எந்த மூலைக்கு சென்று இவன் பெயரைச் சொன்னாலும் கிரிக்கெட் பிரியர்கள் சற்று மிரளுவார்கள். டவுன் டீமில் விளையாடினான். சில உயரங்களுக்கு சென்றிருக்க வேண்டியவன். தேங்கிவிட்டான். இந்தக் கிரிக்கெட் பைத்தியம் எனக்கும் என் மற்ற நண்பர்களுக்கும் பதினெட்டு வயதோடு முடிந்துபோனது. அடுத்த சுவாரசியத்தை நோக்கி நகர்ந்து போனோம். பெண்கள், பியர், வேலை, பணம், புது நகரங்கள் இப்படியாய் நாங்கள் நகர, இவன் மட்டும் உள்ளூரிலேயே, கிரிக்கெட்டிலேயே நின்றுவிட்டான். ப... more »

2013-05-12 05:54:42 (11 comments, 0 reshares, 18 +1s)
வட்டார வழக்கின் மீது முழு அக்கறையுள்ள ஒரே தமிழ் இயக்குனர் வெற்றிமாறன் தான் என அடித்துச் சொல்லிவிடலாம். வடசென்னை, மதுரை – க்குப் பிறகு பெங்களூர் நகரத்தை/ வாழ்வியலை முழுமையாய் திரையில் கொண்டு வந்திருக்கிறார். கிருஷ்ணகிரி-ஓசூர்-பெங்களூர் பகுதிகளில் ஆறு வருடங்களுக்கும் மேல் வசித்திருப்பதால் உதயம் திரைப்படத்தை இன்னும் நெருக்கமாக உள்வாங்க முடிந்தது. பெங்களூர் வாழ் தமிழர்கள் பேசும் தமிழைக் கேட்கும்போதே சிரிப்பு வந்துவிடும். கிருஷ்ணகிரி – ஓசூர் பார்டரில் வசிக்கும் தமிழர்களின் பேச்சு வழக்கு இன்னும் பிரசித்தம். தமிழ் - தெலுங்கு- கன்னடம் - ஆங்கிலம் எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டு (தமிழை சற்று கூடுதலாக), ஒரு கலக்கு கலக்கி, பெரும்பான்மை காரணமாக மேலே மிதந்து வரும் தமிழைப் பேசிக் கேட்பது புதுமையான அனுபவமாக இருக்கும். கிருஷ்ணகிரியில் படிக்கும்போது அங்கிருந்த கிராமங்களில் தங்கியிருந்தேன். கிராமவாசிகள் பேசும் தமிழென்பதால் இன்னும் கலங்கலாக நொப்பும் நுரையுமாய் காதில் பாயும். இந்தக் கலங்கல் தமிழ், திரைப்படத்தில் பிசிறு தட்டா... more »

2013-05-09 11:09:58 (7 comments, 2 reshares, 23 +1s)
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்பது ஒரு பெண்ணை மட்டுமே காதலிப்பதல்ல. மொத்தமாய் காதலுணர்வாய் மாறுவது. அப்படி முழுக்க காதலாய் மாறாத வரை இன்னொருத்தரை நேசிக்க முடியாதெனத்தான் தோன்றுகிறது. பெண் பிரபஞ்சத்தின் சகல இரகசியங்களுக்கும் திறப்பாய் இருக்கிறாள். எல்லா அறிதலுக்குமான துவக்கம் பெண்தான். அறியமுடியாமையின் எல்லையும் பெண்ணாக இருக்க கூடும். இந்த மழைக்காலத்தின் மாலை நேரத்தை, மின் விளக்குகள் சன்னமாய் ஒளிரும் பச்சைப் பசும் பூங்காவை, அகலமான சுத்தமான கடற்கரை சாலைகளை, புராதனத்தின் வாசனையை கட்டிடங்களிலும் நிசப்தத்திலும் சேமித்து வைத்திருக்கும் வீதிகளை, கூப்பிடு தூரத்தில் கேட்டுக் கொண்டே இருக்கும் அலை சப்தத்தை, இன்னும் எதிர்ப்படும் சிறார்களை, முதியோர்களை, வீதி நாய்களை, சாக்கடை குழாய்களில் ஒளியும் உடல் சிறுத்த பூனைகளை, இன்னும்.. இன்னும்… கண்ணில் படும், காதில் விழும், சரியாய் சொல்லப்போனால் புலன்கள் உணரும் அத்துணையும் வசீகரமாகவும், தனித்த அழகாகவும் தோன்ற ஆரம்பிப்பது காதல் வயப்படும் மனதிற்கு மட்டும்தான். ... more »

2013-05-07 17:16:21 (0 comments, 0 reshares, 4 +1s)
Nandu Movie Song - Kaise Kahoon (Hindi Song) - Ilaiyaraja

2013-05-04 19:18:34 (1 comments, 0 reshares, 6 +1s)
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல?.. Kanavu Onru Thonrudhe - Oru Odai Nadhiyagiradhu

2013-05-04 19:15:14 (0 comments, 0 reshares, 2 +1s)
என் தேகம் அமுதம்.. en dEgam amudham - oru Odai nadhiyaagirathu (1983)

2013-05-01 17:30:08 (0 comments, 0 reshares, 6 +1s)
காலையில் நினைவிற்கு வந்த குறும்படம் - கார்த்திக் சுப்புராஜின் காட்சிப்பிழை காட்சிப்பிழை - Parallax - A short film by Karthik Subbaraj

2013-04-18 09:57:36 (5 comments, 0 reshares, 5 +1s)
நான் வாசித்ததிலேயே மிகச் சிறந்த சினிமா விமர்சனம் இதுதான் :))
After the Christmas thing was over, the goddam picture started. It was so putrid I couldn't take my eyes off it. It was about this English guy, Alec something, that was in the war and loses his memory in the hospital and all. He comes out of the hospital carrying a cane and limping all over the place, all over London, not knowing who the hell he is. He's really a duke, but he doesn't know it. Then he meets this nice, homey, sincere girl getting on a bus. Her goddam hat blows off and he catches it, and then they go upstairs and sit down and start talking about Charles Dickens. He's both their favorite author and all. He's carrying this copy of Oliver Twist and so's she. I could've puked. Anyway, they fell in love right away, on account of they're both so nuts about Charles Dickens and all, and he helps her r... more »

2013-04-15 07:04:32 (7 comments, 0 reshares, 34 +1s)
நன்றி நண்பர்களே. Face book தோழமைகளுக்கும் இப்போதே நன்றி சொல்லிவிட மனம் துடிக்கிறது துரதிர்ஷ்டவசமாக அலுவலகத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது மாலை வரை காத்திருக்கவேண்டும். அதுவரை இந்த நன்றியை சுமந்துகொண்டிருப்பது பெரிய பாரம்தான். நான்கு நாட்களாக இணையத்தை திறக்கவில்லை. புதன் கிழமை காலையோடு சரி. அன்று ப்ளஸ் கனத்து வீங்கிப் போயிருந்தது. இதன் மீது எனக்கு பயங்கர கிண்டல். ஒரே அங்கிள்ஸ் ஆண்டிகள் மயம். மொத்தமாய் முப்பது பேர் இதைப் பார்ப்பார்களா? ரீதியிலான கிண்டல்கள். ஆனால் புதன் கிழமை காலை இங்கிருக்கும் மனிதர்கள் மீது தனி வாஞ்சை மேலெழுந்தது. அன்று இரவு மணிஜி கனவிலும் வந்தார். வியாழக்கிழமை காலை அலுவலகம் போகப் பிடிக்கவில்லை. கோபிகிருஷ்ணனின் மொத்த தொகுப்பு பிரிக்கப்படாமல் இருந்தது. பயல்கள் எழும் வரை பிறழ்வு குறுநாவலையும் இன்னும் சில கதைகளையும் வாசித்தேன். எழுந்தவன் என்னைப் பார்த்துவிட்டு “நீ ஆபிஸ் போலயா? அப்ப நானும் ஸ்கூல் போலப்பா” என்றான். “ரைட்டு விடு” என மூவரும் நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருந்தோம். பிஞ்சுகளின் முத்தங... more »

2013-04-07 07:05:20 (1 comments, 0 reshares, 6 +1s)
சாரு, பருத்திவீரனின் Ethnic தன்மையை சிலாகித்து Jorge Sanjinés என்கிற பொலிவிய இயக்குனரின் படங்களோடு பருத்திவீரனை ஒப்பிட்டிருப்பார். நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் jorge ன் படங்களை இணையத்தில் தேடிப் பார்ப்பேன். ஏமாற்றம்தான் மிஞ்சும். நேற்று அதிர்ஷ்டவசமாக 1969-ல் வெளிவந்த blood of condor –ன் டோரண்ட் கிடைத்தது. ஆனால் கடவுளைப் போல ஒரே ஒரு seeder தான் இருக்கிறார். யாரிடமாவது இவரின் படங்கள் இருந்தால் seed-ங்கள்.
டோனி காட்லிப், எமீர் கஸ்தூரிகா போன்றவர்களின் மீது பைத்தியம் பிடித்துத் தொலைவதற்கான காரணங்களில் இந்த இனக்குழு அடையாளமும் ஒன்று. அவர்களின் சினிமா என்பது அவர்களுடைய/ அவர்களுக்கான சினிமா மட்டும்தான். அதில் இருக்கும் ஆழமான உண்மை மட்டுமே அதை உலகிற்கான சினிமாவாக மாற்றுகிறது. ஆக நம்முடைய இலக்கு, உலக சினிமா அல்ல பிராந்திய சினிமா மட்டும்தான். எனக்கு என்னவோ ராமராஜன் படங்களை சற்றுத் தட்டினாலே பிராந்திய சினிமா கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.... more »

2013-04-07 06:06:47 (5 comments, 0 reshares, 13 +1s)
புழுதி சூழ்ப் பகலை
வெறுத்துத் தூங்கிப் போன
வெள்ளைச் சூரியன்
நள்ளிரவில்
செந்நிறமாய்
விழித்துக் கொண்டது
பச்சை நதியின் ஆழத்திலிருந்து
மேலெழுந்த ஆமை
தகிக்கும் இரவின் நிறம் பார்த்துப்
பதறி
மீண்டும் தம் கால்களை
பின்னசைத்து மூழ்கிப்போனது
அகாலப் பறவையின்
பைத்திய அலறலில்
கண் விழித்த
செந்நாய் கூட்டம்
